Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nallathor Veenai
Nallathor Veenai
Nallathor Veenai
Ebook96 pages36 minutes

Nallathor Veenai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803541
Nallathor Veenai

Read more from Maharishi

Related to Nallathor Veenai

Related ebooks

Reviews for Nallathor Veenai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nallathor Veenai - Maharishi

    http://www.pustaka.co.in

    நல்லதோர் வீணை

    Nallathor Veenai

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அந்தச் சாலையின் நடுவே அந்தச் சிறிய காட்டாறு போன்ற ஓடை சாலையை இரண்டு துண்டுகளாக பாகம் பிரித்த மாதிரி போய்க் கொண்டிருந்தது.

    ஆண்டில் மூன்று மாதங்கள் கனமழை பெய்து மலைச் சரிவுகளில் தண்ணீர் வழிந்து வரும்போது அந்த ஓடையில் நீர் நிரம்பிக் கொள்ளும். அந்நேரங்களில் திடீரென்று தண்ணீர் ஓடும். மற்ற மாதங்களில் வறண்டேதான் கிடக்கும்.

    சாரதா கல்லூரி செல்லும் நீண்ட சிமெண்ட் சாலையின் நடுவே, பாலத்திற்கு அருகில் அந்த நிலம் இருந்தது.

    புறநகர் பகுதியில்லை என்றாலும் கூட அங்கு இன்னும் வீடுகள் உருவாகவில்லை.

    சாலையோரங்களில் பெரிய பெரிய புளியமரங்கள், மிகவும் உள்ளே தள்ளினாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக பங்களாக்கள். காட்டிலாகா உயர் அதிகாரியின் பங்களா ஒரு சின்ன வனத்திற்குள் தன்னுடைய பிரமாண்டமான உருவத்தை மறைத்துக் கொண்டிருந்தது. அருகில் சேலம் சர்வீஸ் பஸ் கம்பெனி, அடுத்து சேலம் நகர தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரமாண்டமான வாட்டர் டேங்க். சேலம் ஈரோடு மின்சார நிறுவனத்தில் ஸ்டோர்.

    அதனுடன் ஒட்டினாற் போலத்தான் அந்த காலி மனை இருந்தது. நடுவில் இன்று போல பரவி இருந்த பாறைகளை அந்த நிலத்தின் உரிமையாளர் பாலு வெடிமருந்து வைத்துத் தகர்த்து சமதளமாக்கிக் கொண்டிருந்தார்.

    சின்னதும் பெரியதுமாக பாறைகள் வானில் பறந்து கீழே விழுகின்றன. அருகில் உள்ள தனியார் மின்சார நிறுவனத்தின் தகர ஷெட்டின் மேல் பாறைகள் விழுகின்றன.

    இப்படிச் சமதளமாக்கப்பட்ட இடம் அது.

    அந்த இடத்தில்தான் அந்த வீடு கட்டும் மனையை அனத்தன நாராயணன் வாங்கியிருந்தான். ஆரம்பத்தில் நான்கு பெரிய பெரிய வீடுகள் கட்டுமளவுக்கு அதை விலைபேசி முடித்து வைத்தவன் அவன்தான். அவனுடன் சேர்ந்து அவன் நண்பர்களும் அங்கே வாங்குவதாக இருந்தது. முக்கால் ஏக்கர் நிலப்பரப்புக்குக் குறையாத அதை அவன் ஓரளவு நியாயமான பேரத்தில் பேசி முடித்து முன் பணமும் கொடுத்தான். மூன்று மாதங்களில் மீதித் தொகையை கொடுத்து நிலத்தைக் கிரயம் செய்து கொள்வதாக எழுதிக் கொடுத்தான்.

    எதிரெதிராக நான்கு வீடுகள் கட்டக்கூடிய அளவுக்கு அது போதுமானதாக இருந்தது. வடபுறம் ஒரு ஓடை, புறம்போக்கு. பிற்பட்டு அதையும் சமப்படுத்திக் கொள்ளலாம்.

    ஆரம்பத்தில் அந்த இடத்தைப் பார்த்து பேசி விலை நிர்ணயம் செய்து முன்பணம் கொடுக்கும் வரையில் அவனுடன் சேர்ந்திருந்த நண்பர்கள் பின்பு ஏதேதோ காரணங்களைக் கூறி நழுவத் தலைப்பட்டனர்.

    அந்த நிலத்தை வாங்க முடிவு செய்து முன் பணம் கொடுக்கும்போது அவனுடைய நண்பர்களிடம் பணம் இல்லை. அதற்காக அவன் யோசிச்கவில்லை. தன்னிடமிருந்த பணத்தில் ஒரு தொகையைக் கொடுத்து மூன்று மாத ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டு விட்டான்.

    பிரபல பில்டிங் காண்ட்ராக்டர் பலராமனை அவன் அணுகி தான் வாங்கப்போகிற வீட்டு மனையை காட்டினான்.

    அவரும் அந்த இடத்தைப் பார்த்துவிட்டு மிக நல்ல இடம், நில அமைப்பும், அதன் சூழ்நிலையும் அழகாக இருப்பதால் அந்த இடத்தில் எப்படிப்பட்ட வீடு கட்டலாம் என்பதைப் பற்றி அவனுக்குக் கூறி இடம் வாங்க தன்னுடைய பூரண திருப்தியை தெரிவித்திருந்தார்.

    ஒரு நல்ல காண்ட்ராக்டர் கிடைத்துவிட்ட திருப்தி அவனுக்கு.

    ஆனால், இன்று?

    அவனுடைய ஆரம்பகால ஆசைகள் அத்தனையும் நிர்மூலமாகிற மாதிரி காரியங்கள் நடந்து கொண்டிருந்தன.

    ஆரம்பத்தில் அந்த நிலத்தை வாங்குவதில் உற்சாகம் காட்டிய மற்ற மூன்று நண்பர்கள்...

    அவர்களை நம்பி தன் சொந்தப் பணத்தில் முன் பணம் கொடுத்தவரை உடன் இருந்த நண்பர்கள்...

    வீடு கட்ட அந்த இடத்தை வாங்கியபின் அந்த இடத்தில் எப்படிப்பட்ட வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் தங்கள் அபிப்ராயங்களை ஆர்வத்துடன் கூறிய நண்பர்கள்...

    இன்று...

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி அந்த இடத்தை வாங்குவதிலிருந்து பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

    மற்ற மூன்று நண்ர்களும் வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு கூட்டமைப்பில் சேர்ந்து விட்டதாகவும், நியூ ஃபோலாண்ட் அருகில் ஒரு இருபத்தைந்து வீட்டுமனை இப்பொழுதைய விலையைவிட இன்னும் குறைந்த விலையில் பேரம் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும், அனந்த நாராயணன் பார்த்து இருக்கிற இடம் விலை அதிகம் என்று எல்லோரும் நினைப்பதாகவும் கூறி அப்படியே நழுவி விட்டார்கள்.

    மூன்று மாதத்தில் முழுத்தொகையும் கொடுத்து அந்த இடத்தைக் கிரயம் செய்து கொள்ளவேண்டும். இல்லையேல் முன் பணமாகக் கொடுத்த தொகை அத்தனையும் போன மாதிரிதான். அதை எக்காரணத்தைக் கொண்டும் திருப்பிக் கேட்க முடியாது.

    அந்த இடத்தில் சோர்ந்து போய் நின்று கொண்டிருந்தான் அனந்த நாராயணன்.

    நண்பர்களிடம் இதுவரை அவன் தன் நிலைமையை எல்லா வகையிலும் எடுத்துக் கூறிவிட்டான்.

    அவர்கள் நிர்தாட்சண்யமாக தங்கள் மறுப்புகளை கூறிவிட்டனர்.

    Enjoying the preview?
    Page 1 of 1