Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nooru Jenmam Nee Vendum!
Nooru Jenmam Nee Vendum!
Nooru Jenmam Nee Vendum!
Ebook256 pages1 hour

Nooru Jenmam Nee Vendum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.

She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118503823
Nooru Jenmam Nee Vendum!

Read more from Uma Balakumar

Related to Nooru Jenmam Nee Vendum!

Related ebooks

Reviews for Nooru Jenmam Nee Vendum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nooru Jenmam Nee Vendum! - Uma Balakumar

    http://www.pustaka.co.in

    நூறு ஜென்மம் நீ வேண்டும்!

    Nooru Jenmam Nee Vendum!

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    1

    பகலிலிருந்து உதிர்ந்து கருமை பூமியில் விழுந்த மலராய், புலம் பெயர்ந்த இரவுப் பொழுதில், நிலவு உதயமாக ஆரம்பித்திருந்தது.

    இரவில் உறங்காத விண்மீன்கள், வானில் மகிழ்ச்சியுடன் கண் சிமிட்டியபடி பூமியைக் காதலுடன் பார்வையிட்டன. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், பயணிகளின் பரபரப்பான பயண ஆயத்தங்களினால் ஒரே இரைச்சலாக இருந்தது.

    அந்த முதல் வகுப்புப் பெட்டியில் ஏறிய நிவேதிதா, தன் சூட்கேஸையும் ஏர்பேகையும் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

    எதிரே ஒரு வயதான தம்பதியும், மறுபுறம் அவர்களுடைய மகனைப் போலிருந்த ஒரு இளைஞனும் அமர்ந்திருந்தனர்.

    அவன் ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருக்க, வயதானவர்கள் இருவரும் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

    அவளைக் கண்டதும், கனிவுடன் புன்னகைத்த அந்தப் பெண்மணிக்கு சிறு முறுவலைப் பதிலாக அளித்தவள், உடனே தன் ஹேண்ட் பேகுடன் மேல் பர்த்தில் ஏறிப் படுத்துக் கொண்டாள்.

    ரயில் முன்னோக்கிச் செல்ல... மனம் பழைய நினைவுகளில் பின்னோக்கிச் சென்றது.

    நிலா மிதக்கும் குளத்துத் தண்ணீராய்... நினைவுகள் பழைய ஞாபகங்களில் மிதக்க ஆரம்பித்தன.

    நிவேதிதா பி.இ. இறுதி வருடப் படிப்பை முடித்து விட்டு ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.

    திண்டுக்கல்லுக்கு அருகிலிருக்கும் ஒரு கிராமம்தான் அவளுடைய ஊர்!

    நிவேதிதாவின் அப்பா, அவள் சிறு வயதாக இருக்கும்போதே இறந்து விட்டார்.

    அவளுடைய தாய் தனித்துத் தவிக்க, அவர்களுடைய மில்லையும், புகையிலைத் தொழிற்சாலையையும் பார்த்துக் கொள்வதற்காகவும், ஆண் துணையில்லாத குடும்பத்திற்கு துணையாகவும், அவளுடைய தாய் மாமா விசுவநாதன் தன் மனைவியோடு அக்கா செளந்தரத்தின் ஊருக்கே வந்து விட்டார்.

    அன்றிலிருந்து இன்று வரை அந்தக் குடும்பத்திற்கு ஒரு தூணாய்... வழிகாட்டியாய் எல்லாமுமாக இருப்பவர் அவர்தான்!

    மனைவியும் அக்காவும் இறந்த பிறகு, சிறியவள் நிவேதிதாவையும், பெரியவள் மைத்ரேயியையும் தன் மக்களாய் சுவீகரித்துக் கொண்டவரும் அவரே!

    இன்றுவரை, அவர்களுக்கு துணையாகவும் இருந்து வருகிறார் அவர்.

    அவளுடைய அக்கா மைத்ரேயிக்கும் அவளுக்கும் எட்டு வயசு வித்தியாசம்!

    அவளுடைய அம்மா எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, இன்றுவரை தன் தங்கைக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருபவள் அவள்.

    தன்னுடைய மடந்தைப் பருவத்தில் சிறு புறாவாய் பயச் சிறகு விரித்துத் தான் படபடத்தபோது, பாச நிழல் போர்த்தி, தன்னை மாடத்திற்குள் பத்திரமாய் அடைகாத்த அக்காவின் நினைவில், நிவியின் விழியோரங்கள் மௌனமாகக் கசிந்தன.

    இந்த முறையாவது, விசு மாமாவிடம் பேசி அவளை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டுமென்ற வேகம் வந்தது.

    தனக்கென்று எதையுமே யோசிக்காமல், தங்கையின் நலனே குறியாய் வாழும் அவளுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டிய கடமை தனக்கிருப்பதை பெரும் சஞ்சலத்துடன் உணர்ந்தாள் நிவேதிதா.

    சிறு வயதிலிருந்து, தனக்காகவே எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து, தன் மகிழ்ச்சி ஒன்றே முக்கியமாய் வாழ்ந்து வரும் ஒரு தாயுமானவளைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வே பெரும் நெகிழ்வைத் தருவதாய்!

    சிறு வயதில் இருவரும் வீட்டு முற்றத்தில் நீர் தேக்கி, சிறு காகிதக் கப்பல்கள் செய்து ஓடவிட்டுக் களித்து விளையாடிய ஞாபகங்கள், மெல்லிய மின்னலாய் உள்ளே பரவின.

    மனம், பாச நிகழ்வுகளில் ஊஞ்சல் கட்டி ஆட, விடியலை எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தாள் அவள்.

    ஏனோ உறக்கம் வரவேயில்லை...! இதயத்திற்கு இதமான கனவுகளில் மிதந்து கொண்டிருந்தவளை, திடீரென்று எழுந்த தீனமான அலறல் சப்தம் கலைத்தது.

    கலவரமாய் ஏதோ குரல்கள் கேட்க, பதறி விழித்தால், கீழே அந்த முதியவர் நெஞ்சைப் பிடித்தபடி துடித்துக் கொண்டிருந்தார்.

    அவருடைய உடல் வியர்வையில் நனைந்திருக்க, அந்தப் பெண்மணி ஒன்றும் புரியாமல் வாயைப் பொத்தி அலறியபடி அரற்ற ஆரம்பித்திருந்தார்.

    அவர்களின் மகன்தான், சமயோசிதமாக அவருக்கு முதலுதவிகள் செய்து கொண்டிருந்தான்.

    அவள் பதட்டத்துடன் பர்த்தை விட்டுக் கீழே இறங்கியபோது, அந்த அம்மாள் அவளுடைய கையைப் பிடித்தபடி அழ ஆரம்பித்தார்.

    அதே நேரம், ஒரு நிமிஷம் பாத்துக்கங்கம்மா... என்று வெளியே ஓடிய அந்த வாலிபன் உடனே டி.டி. ஆரை அழைத்து வந்தான்.

    அவரிடம், இந்த ட்ரெயின்லே யாராவது டாக்டர்ஸ் இருக்காங்களான்னு உங்க 'சார்ட்'லே கொஞ்சம் பாருங்க சார் என்றபடி பெரியவருக்கு நெஞ்சில் அழுத்தி மசாஜ் செய்ய ஆரம்பித்தான்.

    உடனே அவரும் பார்த்துவிட்டு, டாக்டர் யாரும் அந்த ரயிலில் பயணம் செய்யவில்லை என்று பதறினார்.

    உடனே அடுத்து வர ஸ்டேஷன் மாஸ்டருக்குப் போன் பண்ணுங்க சார்... மேஸிவ் ஹார்ட் அட்டாக்குன்னு நினைக்கிறேன்... ஸ்டேஷன் வர எவ்வளவு நேரமாகும்? அவன் பதட்டத்துடன் வினவினான்.

    அரை மணி நேரமாகும்ங்க என்றபடி அவசரமாக போன் செய்வதற்குக் கிளம்பினார் அவர்.

    ஒரு நிமிஷம் சார்... என்று அவரைத் தடுத்தவன், உடனே ஹாஸ்பிடல்லேருந்து ஆம்புலன்ஸும் ஸ்ட் ரெச்சரும் அந்த ஸ்டேஷன்லே ரெடியா வைக்கச் சொல்லுங்க... உடனே அட்மிட் பண்ணிடலாம்... என்றான்.

    உடனே, அந்தப் பெண்மணி சத்தமாக அழ ஆரம்பித்தார்.

    அம்மா! ப்ளீஸ் அழாதீங்க... ஹார்ட் அட்டாக் மாதிரி தான் தெரியுது... ஏதாவது மாத்திரை சாப்பிடறாரா? நாக்குக்கு அடியில் வச்சிக்கிற ஒரு மாத்திரை எழுதிக் குடுத்திருப்பாங்களே அது இருக்கா? அவசரமாகக் கேட்டான்.

    இல்லையேப்பா... இதுதானே முதல் தடவை...! தேம்பியபடிக் கூறினார் அவர்.

    நீங்க பதட்டப்படாம முதல்லே எதிர் சீட்டில உக்காருங்கஎன்றபடி அந்தப் பெரியவரின் நெஞ்சை நீவி விட ஆரம்பித்தான் அவன்.

    பிறகு அரை மணி நேரத்தில் ஸ்டேஷன் வந்துவிட, ஆம்புலன்ஸும் ஸ்ட்ரெச்சரும் தயார் நிலையிலிருந்தன.

    ஸ்ட்ரெச்சருடன் மருத்துவமனைப் பணியாளர்கள் வேகமாக வர, அவரை அதில் படுக்க வைத்துவிட்டு, எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டான் அவன்.

    அப்போது அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்ட அந்தப் பெண்மணி, நெகிழ்ந்து போய் கதற ஆரம்பித்தார்.

    நீ யார் பெத்த பையனோ... நல்லா இருக்கணும்ப்பா! எங்க குல தெய்வத்தையே நேரில பாத்த மாதிரி இருக்கு! நீ நல்லா இருப்பே. இதை நாங்க மறக்கவே மாட்டோம்... உன் அட்ரஸ் இருந்தாக் குடுப்பா... நீ நல்லா இருக்கணும்! கையெடுத்துக் கும்பிட்டார்.

    நிவிக்கு அப்போதுதான் புரிந்தது... அவன் அவர்களின் மகனில்லை என்பது!

    அவள் வியந்து நிற்கும்போதே அவரை சமாதானப்படுத்தினான் அவன்.

    நீங்க முதல்லே இறங்குங்க... பேசிட்டிருக்க நேரமில்லை... நானும் கூட வரேன். அவரை அட்மிட் பண்ணிட்டு, உங்க ரிலேட்டிவ்ஸ் யாராவது வர வரைக்கும் உங்க கூடவே இருக்கேன் என்றபடி அவசரமாக அவரை அழைத்துச் சென்றான்.

    அவளுக்குள் பெரும் வியப்பு! என்ன மனிதன் இவன்... பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவருக்கு ஏதாவது ஒன்று என்றால் கூட முகம் திருப்பும் மனிதர்களுக்கிடையில் இவ்வளவு மனித நேயமும், முன் பின் அறியாதவர்க்கு உதவும் குணமும் எங்கிருந்து வந்தன?

    மனதிற்குள் அவனைப் பற்றிய பெரும் பிரமிப்பும் பெருமிதமும் சடசடவென்று நிறைந்தன.

    அதன் பிறகு, இரவு முழுவதும் கூபேயில் தனித்திருந்தும், அந்தப் பெரியவருக்கு என்னாகியிருக்குமோவென்ற தவிப்புமாகச் சேர்ந்து, அவளை உறங்க விடாமல் செய்தன.

    விழித்திருந்த நேரம் முழுவதும், மனதில் அந்தப் பெயர் தெரியாத மனிதனே மையம் கொண்டிருந்தான்.

    வெகு நேரம் கழித்தே உறங்கியவளை விடியல் உசுப்பி எழுப்ப ஆரம்பிக்க, சில்லென்ற பனி படர்ந்த காற்றும், மெலிதாய் பரவிய ஒளியும், பூமியின் நிசப்தத்தை கலைக்க ஆரம்பித்திருந்த பறவைகளின் பட்டி மன்றமும், விடியலின் சீதனங்களாய் அவனைக் கண் விழிக்கச் செய்தன.

    சோம்பலுடன் விலகிய இமைகளை விரித்தபோதுதான், தான் எங்கிருக்கிறோமென்றே உரைத்தது.

    ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது, சூரியனும் தன் சிவந்த கண்களுடன் விழிக்க ஆரம்பித்திருந்தான்.

    ரயில் மெதுவாகி, தன் இயக்கத்தை நிறுத்தி பலமாய் மூச்சு விட்டது.

    அவள் தன் பொருட்களை சேகரிக்கும்போதே, நேற்றிரவு நடந்த ஞாபகங்கள் நிழலாய் மனதில் வர, அதில் மெல்லிய பனிப் படர்வாய் அந்த இளைஞனின் நினைவு!

    ஏனோ அவனைத் தன்னால் மறக்க முடியாதென்று தோன்றியது.

    எங்கிருக்கிறாய் நீ... எங்கிருந்து வந்தாய்? வானுலகிலிருந்து பூமிக்கு மற்றவர் துயர் துடைக்க வந்த தேவ மைந்தனா நீ?

    மனம் பலப்பல யோசிக்க, செல்லமாய் அதட்டி அதை அடக்கும்போதே மாமாவின் குரல் கேட்டது.

    நிவிம்மா! எப்படிடா இருக்கே! வாஞ்சையுடன் விசாரித்தபடி, உள்ளேயே வந்து விட்டார் அவர்.

    அவரைப் பார்க்கும்போதே மனம் கசிந்தது.

    ஆற்று நீரில் விழுந்த காட்டு மரம், காலம் செல்லச் செல்ல மற்றவர்களுக்கும் பாலமாவது போல், சில மனிதர்களின் வாழ்க்கை, பிறருக்காகவே தியாகம் செய்யப்படுவது புரிவதாய்!

    என்னடா? எப்படி இருக்கேன்னு கேட்டா பதில் சொல்லாம என்னையே பாத்திட்டிருக்கே? அவருடைய கேள்வி அவளை உசுப்பியது...

    தலையைக் குலுக்கித் திரும்பியவள், நல்லாருக்கேன் மாமா... நீங்க... அக்கால்லாம் எப்படி இருக்கீங்க... இத்தனை நாள் என் தொல்லை இல்லாம ஜாலியா இருந்திருப்பீங்க... இனிமே கஷ்டம்தான்! குறும்புடன் கூறினாள்.

    நாங்க எல்லாரும் நல்லாருக்கோம்... உன் அக்காவுக்கு எப்பவுமே உன் நினைப்புதான்... உன்னை எதிர்பார்த்து ஆசையாக் காத்திட்டிருக்கா... என்னவோ தொல்லைன்னியே... அது எங்களுக்கு இல்லை... உனக்குத்தான்... வா.

    பூடகமாகக் கூறிவிட்டு அவர் சூட்கேஸை எடுத்துக் கொண்டு நகர, மாமா... ஒரு நிமிஷம் என்று அவரை நிறுத்தினாள் அவள்.

    என்ன மாமா... என்னென்னவோ சொல்றீங்க?

    யோசனையாகக் கேட்டவளிடம், உனக்கு உடனே கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுத்து, மைத்ரேயி மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டா... அதைச் சொன்னேன்... என்றார் நமட்டுச் சிரிப்புடன்!

    ஓ... அதெல்லாம் நான் அக்காவை சமாளிச்சிக்கறேன்... எனக்கு என்ன கவலை... அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவன் தானே கவலைப்படணும்... என்கிட்ட மாட்டிக்கிட்டு எவன் அவஸ்தைப்படப் போறானோ? சுழித்த உதடுகளுடன் குறும்பாகக் கூறினாள்.

    அதானே... இந்த துடுக்குப் பொண்ணுகிட்டே யார் சரணாகதி அடையப் போறாங்களோன்னு நான் கூட மைத்திகிட்ட சொன்னேன்.

    ம்... சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு, சுய சிந்தனையே இல்லாம, ஆண்கள் சொல்றதை சிரமேற்று செய்யறவங்களா இருக்கணும்... அவங்களைத்தானே நல்ல பொண்ணும்பீங்க... சரியான மேல் சாவனிஸ்டிக் சொசைட்டி மாமா இது! நிவி அலட்சியமாகக் கூறினாள்.

    சரி சரி... நம்ம பேச்சை எல்லாம் இத்தோட விட்டுடலாம்... நான் இதை உன்கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சா மைத்தி என்னைக் கோச்சுப்பா... வா போகலாம்...

    கார் கதவைத் திறந்துவிட்டு அவர் காத்திருக்க, டிரைவரை நலம் விசாரித்து விட்டுப் பின்புறம் ஏறிக் கொண்டாள் அவள்.

    டிரைவர் காரை ஓட்ட, மெளனமாக முன்புறம் அமர்ந்திருந்த மாமாவின் பேச்சையே மனதிற்குள் அசை போட்ட படி, ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தாள் அவள்.

    2

    எங்கு திரும்பினாலும், பசுமையாய் தெரிந்த அந்த இயற்கை அழகு, அவளை ஆட்படுத்திக் கொண்டது.

    காலம் எழுதிய காவியமாய்... பூமிப் பெண் பசுமையுடன் அவளை நோக்கிப் புன்னகைத்தாள்.

    தூரத்தே... மெல்லிய புகை படர்ந்த பழங்காலச் சித்திரங்களாய், மலைத் தொடர்கள் தெரிந்தன.

    மனம் உடனே மைத்ரேயியிடம் சென்றது... போன முறை சென்றிருந்தபோது, எல்லா சாமிக்கும் உருவம் இருக்கிறப்ப லிங்கம் மட்டும் ஏன் இப்படின்ற தன் கேள்விக்கு, பெண் இணைந்திருப்பதுதான் உலகம் என்கிற உண்மையை உணர்த்தும் ஒரு உன்னத அடையாளம் அது என்று பொறுமையுடன் பதில் தந்த சகோதரியின் நினைவு!

    தான், என்ன கேள்வி கேட்டாலும் சர்வ சுதந்திரத்துடன் அனுமதித்த... தோழியாய் அங்கீகரித்து பதில் கூறிய அக்கா!

    இப்போது இருக்கின்ற தலைமுறையைச் சேர்ந்த பலருக்குத் தெரியாத, பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், பாண்டி, இது போன்ற பல விளையாட்டுக்களை பொக்கிஷமாய் அறிமுகப்படுத்திய அக்கா!

    என்னம்மா? எதுவுமே பேசாம அமைதியா வரீங்க? டிரைவர் தங்கவேலு, கேட்க, சட்டென்று கலையும் மெல்லிய பனிப் புகையாய் ஞாபகங்கள் கலைந்தன.

    ஒண்ணுமில்லை வேலண்ணன். நம்ம ஊரை ரசிச்சிட்டே வந்தேன்... உங்க வீட்டில் எல்லாரும் நல்லாருக்காங்களா?

    எல்லாரும் சுகம்தான்மா! மைத்ரேயி அம்மாதான் நீங்க எப்ப வருவீங்கன்னு நேத்திலேருந்து பரபரப்பாகக் காத்திட்டிருக்காங்க! மனம் நிறைந்த புன்னகையுடன் கூறினார்.

    அப்படியா? அக்கா அவ்வளவு சுலபத்துல தன்னோட உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டாங்களே? அவங்க என்னை மாதிரி இல்லையே... அவங்க பாசத்தை எல்லாம் சில செய்கைகள்லே மட்டும் தான் உணரலாம். இல்லை மாமா?

    ஆமாம்மா! அவ எப்பவுமே அப்படித்தானே... உருவத்திலயும் குணத்திலயும் அப்படியே எங்க அக்கா மாதிரி... ரொம்ப அழுத்தம்...! நீ மாமா மாதிரி! தோ... வீடு வந்துடுச்சி... பாரு... அவ உனக்காக வாசல்லே காத்துட்டிருக்கா!

    வீட்டு வாசலில் கார் சென்று நின்றதும், பாசப் பூந்தோட்டமாய் எதிரே நின்றிருந்த மைத்ரேயியை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் நிவி.

    அக்கா! உங்களை ஒண்ணு கேக்கலாமா? எப்பப் பாத்தாலும் ஃப்ரெஷ்ஷாவே இருக்கீங்களே... அதோட ரகசியம் என்னன்னு எனக்கு சொல்லக்கூடாதா? எப்படி இருக்கீங்க? சலுகையுடன் கேட்டபடி அவள் தோளில் சாய்ந்து கொண்டாள்.

    பரிவுடன் அவளை அணைத்த மைத்தி, அமைதியுடன் சிறு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு, தங்கையின் முன்னுச்சியில் தன் உதடுகளைப் பதித்து வரவேற்றாள்.

    நிவியைப் பார்த்தபோது அவளுக்கு மிகவும் பெருமையாய்...!

    பளிங்குச் சிற்பமாய் சந்தன மலர்போல் அழகிய தேவதையின் சாயலோடு

    Enjoying the preview?
    Page 1 of 1